ஞாயிறு, 8 மே, 2011

உதவி செய்"

வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக் கூடாது


முரண்படுகிறேன் -

அடுத்தவருக்கு உதவுவது
அறிவிக்கப்பட வேண்டும்

தற்பெருமையிது என்று
தவறாக நினைப்பவர்கள்

தலையிலே குட்டிக் கொள்ளுங்கள்...

காரணம் இதுதான் -

உதவி தெரியப்படுத்தப்படும்போது
நாமும் இதுபோல் உதவ வேண்டும்ற
எண்ணத்தைத் தூண்டும்

உதவி மறைக்கப்படும்போது..

வாங்கிய கடனை திருப்பித்தராமல்
ஏமாற்றுவதற்கு வழி வகுக்கும்...

ஒருவன் உழைக்க
அடுத்தவன் தழைக்க
அமைத்த வழியாகிவிடும்

முட்டாள்களாகவே இருக்க வேண்டாம்


மாற்றுவோம்...பழைய மொழிகளை..

"
உறவுகளுக்கு அறிவித்துவிட்டு உதவி செய்"... என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக