சனி, 24 ஏப்ரல், 2010

மர்மத் தாக்குதல்கள் ...

மர்மத் தாக்குதல்கள்


தலை குனிந்து நடக்கும்

பெண்கள் தான் நல்லவர்களாம்


அடப்பாவிகளா…


எத்தனை காலத்திற்குத் தான்

பெண்களைத் தலைநிமிரவிடாமல்

இருக்கச் செய்யப்போகிறீர்கள்?


அன்னநடைதான் -

பெண்களுக்கு அழகாம்


அம்மாடீ ….நீ

பின்தங்கி இருப்பதற்கே

இந்கச் சமூகம்

உன்னைத் தயார் செய்கிறது


அதிர்ந்து பேசாத பெண்ணே –

குடும்பத்திற்கு ஏற்றவளாம்


உன் குரலைக் கூட

அடக்கிவிடுகிறார்களே…


மயங்கிவிடாதே…

இவையெல்லாம் மர்மத் தாக்குதல்கள்..


தலை குனியாதே…

நிமிர்ந்து நில்… உலகத்தைப் பார்!


அன்ன நடை எதற்கு?

வேகம் கூட்டு!

இரண்டடி முன்சென்று திரும்பிப் பார்….


மூச்சுமுட்ட நின்றுகொண்டிருக்கும்

பெண்மையைல் அடக்கியே பழக்கப்பட்ட ஆண் சமூகம்.


அதிரப் பேசு…உன் குரல்….

எட்டுத் திக்கிலும் எதிரொலிக்கட்டும்!.


யாரோ போட்ட பாதையில்

இன்னும் நடந்து கொண்டிருக்காதே….


உன் பார்வை …நேரானது தான்

தொடர்ந்து நட….துணிந்து நட


உன் வெற்றியைப் பார்த்து

வெட்கப்படட்டும் -

உன்னை அடக்கி வைத்தவர்கள்!


1 கருத்து:

  1. நான் என்னப்பா பெரிசா சொல்லப்போறேன்... நாளு பேரை திட்டினா எனக்கு சந்தோஷம்தான்

    பதிலளிநீக்கு